புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள் இல்லை: புதிய முறை அறிமுகம்!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற 10,863 மாணவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 498 பேரின் பெறுபேறுகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...