பெண் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!

Date:

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று, நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பல பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து, தள்ளிய சம்பவத்தில் இருந்து, சிறப்பு விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

ஒன்றுகூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் விதிகளுக்கு பொலிஸார் மதிப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...