பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Date:

இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் புதிய முஸ்லிம் ஆண் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலமாக  கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

  • க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம். கணிதம். தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப்
  • (C)பெற்றிருத்தல் 2005.01.31ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்
  • தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

1. நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும்
2.எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்
3.நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு…

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...