பொலிஸாருக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்!

Date:

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கான பாதீடு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.

எனினும் காவல்துறைக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்த தீர்வுகளை தேசிய காவல்துறை ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு 47,030,000 ரூபா ஒதுக்கப்பட்டது. எனினும் 2018 இல் 127,764,000 ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...