போதைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் 9 மாதங்களுக்குள் புனர்வாழ்வளிக்க பரிந்துரை: சுசில்

Date:

போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 குழந்தைகளும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ICE போன்ற ஆபத்தான மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) மசோதாவை ஜனவரி முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிலைமைகளை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை (PSC) நியமித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரதன தேரரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான தீர்வுகளை காண்பதற்கு பொதுச்சபையொன்றை நியமிக்குமாறு ரதன தேரர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...