போதைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் 9 மாதங்களுக்குள் புனர்வாழ்வளிக்க பரிந்துரை: சுசில்

Date:

போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 குழந்தைகளும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ICE போன்ற ஆபத்தான மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) மசோதாவை ஜனவரி முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிலைமைகளை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை (PSC) நியமித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரதன தேரரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான தீர்வுகளை காண்பதற்கு பொதுச்சபையொன்றை நியமிக்குமாறு ரதன தேரர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...