மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)  மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நெடுகுடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அவதானித்ததுடன், அனல்மின் நிலைய பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...