மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)  மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நெடுகுடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அவதானித்ததுடன், அனல்மின் நிலைய பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Popular

More like this
Related

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை...

இலங்கை விமான போக்குவரத்து வரலாற்றில் சாதனை

இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதன் வரலாற்றில் ஒரே...

மனித நேயப் பணிகளில் முன்மாதிரியாகத் திகழும் சவூதி அரேபியா.

இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் லீக் (ராபிதா) இலங்கைகான பிரதிநிதி.   புனித ரமழான் மாதம் மனிதநேயத்தையும்,...

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன்,...