மலையகத்தில் கடும் மழை: விக்டோரியா வான் கதவுகள் திறப்பு

Date:

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை அடைந்துள்ளதால் அதன் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 7.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தலைமை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக , குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்படுகின்றது.

இதேவேளை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் கங்கஹவட்டகோரல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...