‘முட்டை விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம்’

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், ஒரு சில வர்த்தகர்கள் முட்டை சந்தையை தாம் விரும்பியவாறு கையாள்வார்கள் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

கண்டியில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேவைக்கேற்ப முட்டை வரத்து இல்லாததால், மொத்த முட்டை விலை 53 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 45 ரூபாவாக இருந்தாலும், மொத்த விலையுடன் ஒப்பிடுகையில் சில்லறை முட்டை விலை 60 ரூபாயை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முட்டைக்கு 45 ரூபா கட்டுப்பாட்டு விலை இருந்த போதிலும், தற்போது அது உத்தியோகபூர்வமற்ற முறையில் 50 ரூபாயாக மாறியுள்ளதாகவும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டம் அமுலில் உள்ள போதிலும், மொத்த வியாபாரிகளுக்கு அதே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது பேக்கரி உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து 53 முதல் 55 ரூபாய் வரை முட்டைகளை வாங்குவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், சிறு வியாபாரிகள் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளை விற்று வியாபாரத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.

சிறு முட்டை விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறியதால், தற்போது ஒட்டுமொத்த முட்டை வியாபாரமும் முடங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...