‘முட்டை விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம்’

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், ஒரு சில வர்த்தகர்கள் முட்டை சந்தையை தாம் விரும்பியவாறு கையாள்வார்கள் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

கண்டியில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேவைக்கேற்ப முட்டை வரத்து இல்லாததால், மொத்த முட்டை விலை 53 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 45 ரூபாவாக இருந்தாலும், மொத்த விலையுடன் ஒப்பிடுகையில் சில்லறை முட்டை விலை 60 ரூபாயை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முட்டைக்கு 45 ரூபா கட்டுப்பாட்டு விலை இருந்த போதிலும், தற்போது அது உத்தியோகபூர்வமற்ற முறையில் 50 ரூபாயாக மாறியுள்ளதாகவும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டம் அமுலில் உள்ள போதிலும், மொத்த வியாபாரிகளுக்கு அதே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது பேக்கரி உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து 53 முதல் 55 ரூபாய் வரை முட்டைகளை வாங்குவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், சிறு வியாபாரிகள் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளை விற்று வியாபாரத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.

சிறு முட்டை விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறியதால், தற்போது ஒட்டுமொத்த முட்டை வியாபாரமும் முடங்கியுள்ளது.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...