மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு!

Date:

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மேல்மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 லீற்றர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...