வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Date:

இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி இலக்கம் 2304/14 வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரதாச நாணயக்கார, ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் மற்றும் ஜே.டபிள்யூ.எஸ். சிறிவர்தன அதன் ஏனைய உறுப்பினர்களாக இருப்பார் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...