ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவிற்கும் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவிற்கும் மற்றும் இலங்கை முழுவதும் மாவட்ட ரீதியாக மாவட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு மருதானையிலுள்ள அஷ்- ஷபாப் (AMYS) தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போரத்தின் செயலாளர் ஷிஹார் அனீஸ், மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம்.அமீன் உற்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான என்.எம். அமீன் பேசுகையில் ஊடகவியலாளர் முன்னுள்ள பொறுப்பு குறிப்பாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றின ஊடகவியலாளர்களோடு நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது போன்ற விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவதும் அவசியம் என சுட்டிக்காட்டினார்.

செயற்குழுவுக்கும் மற்றும் மாவட்டக்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட இணைப்பாளர்கள் முஸ்லிம் மீடியா போரத்துடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் மாவட்டத்தில் அவர்களால் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றதுடன் அதில் கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பலரும் பல கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

நிகழ்வில் இறுதியில் “தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?” எனும் தொனிப்பொருளில் விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினருமான எம்.பி.எம். பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...