அனைத்து தமிழ் கட்சிகளையும் கொழும்புக்கு வருமாறு, சம்பந்தன் திடீர் அழைப்பு!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக  தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் சம்பந்தனின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அடுத்த மாதம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...