அனைத்து தமிழ் கட்சிகளையும் கொழும்புக்கு வருமாறு, சம்பந்தன் திடீர் அழைப்பு!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக  தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் சம்பந்தனின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அடுத்த மாதம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...