ஆசிரியர்கள் புடவையையே அணிய வேண்டும் – அமைச்சர் சுசில்

Date:

கொவிட் தொற்று பரவியுள்ள காலப்பகுதியில் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்குமாறு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் அதனை திருத்துமாறு அரச நிர்வாக செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர நேற்று முன்தினம் (21) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,  பல பகுதிகளில் உள்ள பெண் ஆசிரியைகள் புடவை மற்றும் ஒசரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பல பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்கள் வசதியான உடையில் பாடசாலைக்கு வந்திருந்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு சாதாரண உடையில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தலையிட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பாடசாலை  பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...