இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு!

Date:

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம்  குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர், நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நகரத்தைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இப்போதைக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 20 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியதால் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன,” என்று Cianjur நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன்,   கூறினார்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே ஆகும்.

நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...