இன்று செந்நிலாவாகும் வெண்ணிலா!

Date:

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று (08) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும், இலங்கைக்கு இது அரைச் சந்திர கிரகணமாகவே காணப்படுகிறது.

மீண்டும் அடுத்த முழு சந்திர கிரகணத்தை  2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதியன்று உலக மக்கள்  காணமுடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாலை 5.48 க்கு கிழக்கு அடிவானத்தில் இருந்து சந்திரன் உதயமாகும் நிலையில், அதன் கடைசி பகுதியை மட்டுமே பகுதி சந்திர கிரகணமாக இலங்கை மக்கள் காணக்கூடியதாக இருக்கும். இந்த கிரகணம் மாலை 6.19 க்கு முடிவடையும்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...