இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு!

Date:

பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

அரசியல் பேரணியொன்றில் கலந்துகொண்டபோது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வஸீராபாத் நகரில்  நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும் ஆனால், அவர் ஸ்திரமான நிலையில் உள்ளார் எனவும் அவரின் உதவியாளர் ரபூப் ஹசன் தெரிவித்துள்ளார்

இது இம்ரான் கானை கொல்வதற்கான ஒரு படுகொலை முயற்சி எனவும் ரவூப் ஹசன் கூறினார்.

காயமடைந்த இம்ரான் கான் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக, லாகூரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபத் வரையான நீண்ட அணிவகுப்பு எனும் அரசியல் பேரணியை இம்ரான் கானின் பிரிஐ கட்சி நடத்தி வருகிறது. இப்பேரணியின்போதே வஸீராபாத்  நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பிரிஐ கட்சியின் பிரமுகர்களான பைசல் ஜாவித், அஹ்மெத் சட்டா ஆகியோரும் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கொள்கலன் வாகனத்தின் மீது நபர் ஒருவர் தன்னியகத் துப்பாக்கியினால் சுட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த பிரிஐ பிரமுகர் பைசால்  ஜாவித் கருத்து தெரிவிக்கையில்…

இம்ரான் கான் மீது 3, 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துளளார். காயமடைந்த இம்ரான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கொள்கலன் வாகனத்திலிருந்து இறங்கும்போது ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...