இஸ்ரேல் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Date:

இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது.

நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5ஆவது பொதுத்தேர்தல் இதுவாகும்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது.

ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. அதற்கமைய தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன் யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இதேவேளை பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களைப் பெறும் என்று இன்றைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...