எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (நவ.10) நாடு திரும்பியுள்ளனர்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK 650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் 27வது மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நவம்பர் 6 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.