கஞ்சா பயிரிடும் திகதியை அமைச்சர் கூறுகிறார்!

Date:

கஞ்சா பயிரிடும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

கஞ்சா பயிரிடுவது தொடர்பில் சில பிக்குகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்த அமைச்சர், கஞ்சா என்பது ஒரு மருந்தாகும்.  மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக கூறி எம்பிலிப்பிட்டியவில் 10,000 ஏக்கர் கஞ்சா பயிரிடுவதற்கு எம்பிலிப்பிட்டி மகா சங்கமும் பௌத்த பிக்குகளும் அனுமதிக்க மாட்டார்கள் என இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயகம் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...