கடந்த 2 ஆண்டுகளை விட இம்முறை டெங்கு பரவல் தீவிரம்!

Date:

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின், ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்திய வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாத்தில் டெங்கு பரவல் மிகத் தீவிரமடைந்தது. குறித்த காலப்பகுதியில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது, சுற்றுச்சூழல் சுத்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், டெங்கு நோய் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.

டெங்கு நோயின் பெருக்கத்தை அளவிடுவதற்கு பிரிட்டோ குறிகாட்டி பயன்படுத்தப்படுகிறது.

மேல் மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்த அளவு 5 மடங்காக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100 வீடுகளுள் 20 வீடுகளில் நுளம்பு பெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பின் அவர்களை வைத்தியசாலைகளின் அனுமதிக்கூடிய இடவசதி பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது.

எனவே, சுற்றுச்சூழலை தூய்மையாக்கி, டெங்கு பரவல் அதிகரிப்பதை தவிர்க்குமாறு வைத்தியர் மேலும் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...