கொழும்பில் பெண்களுக்கான ரக்பி போட்டிக்கு பாகிஸ்தான் அனுசரணை வழங்குகிறது!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் அபிவிருத்தியினால் ரக்பி போட்டியில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி சம்பியனாகியது.

அதேநேரம், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி இரண்டாம் இடத்தையும், சப்ரகமுவ பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.

குறிப்பாக அந்த மாவட்டங்கள் தங்களது திறமையான வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட காலங்களில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மாவட்ட மட்டத்தில் ரக்பி போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியது.

பிராந்தியத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் நட்பு நாடுகளின் இளைஞர்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் மொத்தம் எட்டு பெண்கள் அணிகள் பங்கேற்றன. இதற்கு முன்னர் கண்டி, காலி மற்றும் கொழும்புவில் மூன்று போட்டிகள் நடைபெற்றன.

அதற்கமைய மொத்தம் நான்கு ரக்பி போட்டிகளில் இறுதிச் சுற்று கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...