‘சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிளைபோசேட் மீதான தடையை நீக்க வேண்டாம்’

Date:

கிளைபோசேட்  தடை நீக்கம் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சிறுநீரக நோய்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிளைபோசேட் களைக்கொல்லி தடைசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில்   விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணம் கிளைபோசேட் என இதுவரை எந்தவொரு பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

அதிக சிறுநீரக நோயாளர்கள் பதிவாகும் வடமத்திய மாகாணம் உட்பட ஏனைய பிரதேசங்களில் இந்த தடையை நீக்காமல் இருக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலிக்க முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை கிளைபோசேட் மீது அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

விவசாய பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள், வேளாண் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடை அடுத்து கிளைபோசேட் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...