திஹாரி தன்வீர் அகடமி உருவாக்கத்துக்கு மர்ஹூம் அன்சார் ஆசிரியர் செய்த வரலாற்றுப் பங்களிப்பு மகத்தானது!

Date:

திஹாரியில் சமூக சேவையில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்பட்ட, முன்னாள் ஆசிரியரும், அதிபருமான மதிப்புக்குரிய அல்ஹாஜ் ஏ.பி.எம். அன்சார் அவர்கள் நேற்றிரவு காலமானார்.

அன்னார் திஹாரிய ஜமாதே இஸ்லாமியின் ஸ்தாபக உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து ஊருக்கும் சமூகத்துக்கும் தேவையான மார்க்க ரீதியிலும், பொதுச்சேவைகளிலும் இறுதிவரை உழைத்தவராவார்.

இளைஞர்களுக்கான மார்க்க அடிப்படையிலான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகள், பெண்களுக்கான வாராந்த மார்க்கத் தெளிவு நிகழ்ச்சிகள், ஊரிலுள்ள ஏழைகளை இனம் கண்டு ஸதக்கா, ஸக்காத் போன்றவற்றைப் பெற்றுப் பகிர்ந்தளித்ததுடன், நோன்புகாலத்தில் வறியவர்களுக்கு உலருணவுப் பொதி வழங்குதல் போன்ற பல்வேறு நற்பணிகளை பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் செய்துவந்தார்.

மேலும், திஹாரிய அஹதியா அமைப்பின் முக்கிய பதவிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே மகத்தான பணிகளைச் செய்தவராவார்.

தான் ஒரு அமைப்பைச் சார்ந்திருந்தாலும், ஊரிலுள்ள சகல இயக்கங்களுடனும், அன்பாகவும், அந்நியோன்யமாகவும் பழகக்கூடியவராகவும் இருந்தார்.

இவரது சேவையில் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று ‘தன்வீர் அகடமி’ எனும் சிங்கள மொழி மூலமான கல்லூரியைத் திஹாரி மண்ணில் அமைக்கப்பாடுபட்டமையாகும். அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தகவல்: ஏ.எஸ்.முஹம்மத்.
ஓய்வு பெற்ற பரீட்சை ஆணையாளர்.

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...

இ.போ.ச பஸ்ஸை செலுத்தி சென்ற சாரதி மாரடைப்பினால் உயிரிழப்பு

இ.போ.சவுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியொருவர் தான் செலுத்தி சென்ற பஸ்ஸில் மாரடைப்பு...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் நியமனம்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக டபிள்யூ.ஏ.சூலானந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் நிர்வாக சேவைகளில் சிறப்பு...

விடைபெற்றுச் செல்லும் முன்னாள் பணிப்பாளருக்கு சர்வமதத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம்

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல்...