அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் ஏ. றமீஸ், தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி, இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ளவகையில் நடைமுறை படுத்துவதற்கான வேலை திட்டங்களையும் முன்னெடுத்து வருவின்றது.
அந்த வகையில் அண்மையில் இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்துடனான (Indian Academic Research Association) சந்திப்பும் உடன்படிக்கையும் கடந்த 27.09.2022 ஆம் திகதி அன்று இணையவழி ஊடாக இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று 24-11- 2022 ,KSR College of Arts & Science for Women in India நிருவனத்தினுடான சந்திப்பும் உடன்படிக்கையும் இணையவழி ஊடாக இடம் பெற்றுள்ளது.