நாட்டில் பழமையான 850 ரயில் பாலங்கள் சேதமடைந்துள்ளன!

Date:

நாட்டில் தற்போது சுமார் 850 ரயில் பாலங்கள் தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாலங்களில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற எல்ல- தேமோதர நீண்ட பாலமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 1,375 பாலங்களில் 850க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது முழு ரயில் பால அமைப்பில் 50வீதமாகும் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல 850 பழமையான பாலங்கள் உள்ளதால், மேலும் அழிந்துவிடாமல் இருக்க அந்தப் பாலங்களின் மீது ரயில்களை இயக்குவதில் மிகக் குறைந்த வேகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...