புத்தளத்தில் விபத்தொன்றில் உயிரிழந்த பிச்சைக்காரனிடம் ரூ.135,000 பணம்!

Date:

புத்தளம் – சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரனொருவரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகளின் கடவுப் புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் அனவிலுந்தவ பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவரது பையை சோதனை செய்ததில் ரூ.135,000  பணம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில் அவர் பல வருடங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.கிர்த்திபால மேற்கொண்டு வருகிறார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...