புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள் இல்லை: புதிய முறை அறிமுகம்!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற 10,863 மாணவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 498 பேரின் பெறுபேறுகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...