பெற்றோர் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்கள் உணவை குறைக்கின்றனர்!

Date:

இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

தங்கள் பிள்ளைகளிற்கு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளமை, வேலை இழப்புகள், வருமானம் குறைந்துள்ளமை ஆகியன மில்லியன் கணக்கான மக்களிற்கு சத்தான உணவு கிடைப்பது சாத்தியமற்றதாக்கிவருகின்றன.

பிரான்ஸ் தக்க தருணத்தில் வழங்கியுள்ள இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் சிறுவர்கள் மந்தபோசாக்கிலிருந்து விடுபடுவதற்கு இந்த உதவி உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பகுதிகளில் சிறுவர்களை சென்றடைவதற்காக உலக உணவு திட்டம் குழந்தை நல மருத்துவர்களின் கல்லூரியுடன் இணைந்து செயற்படும், எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...