போதைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் 9 மாதங்களுக்குள் புனர்வாழ்வளிக்க பரிந்துரை: சுசில்

Date:

போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 குழந்தைகளும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ICE போன்ற ஆபத்தான மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) மசோதாவை ஜனவரி முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிலைமைகளை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை (PSC) நியமித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரதன தேரரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான தீர்வுகளை காண்பதற்கு பொதுச்சபையொன்றை நியமிக்குமாறு ரதன தேரர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...