போதைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் 9 மாதங்களுக்குள் புனர்வாழ்வளிக்க பரிந்துரை: சுசில்

Date:

போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 78 குழந்தைகளும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ICE போன்ற ஆபத்தான மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) மசோதாவை ஜனவரி முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிலைமைகளை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை (PSC) நியமித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரதன தேரரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான தீர்வுகளை காண்பதற்கு பொதுச்சபையொன்றை நியமிக்குமாறு ரதன தேரர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...