மலேசியா வழங்கிய மருந்துகளை இலவசமாக எடுத்துவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Date:

மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு அவசரமாகத் தேவையாகவுள்ள மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு

நாட்டிற்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் உதவி கோரி இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை நாடியது.

அதற்கமைய, மலேசிய சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் (31) நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமால்தீன், 63,100 அமெரிக்க டொலர் (2 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா) பெறுமதியான மருந்து பொருட்களை மலேசியாவிலுள்ள ஓய்வுபெற்ற இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல், சுமங்கலா டயஸிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த நன்கொடையை விமானம் மூலம் இலவசமாக கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கோலாலம்பூரிலிருந்து கொழும்புக்கு யூஎல் 319 என்ற விமானத்தில் இந்த மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...