மானிய விலையில் எரிபொருள் கொள்வனவு!

Date:

ரஷ்யாவிடமிருந்து மானிய விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு மாஸ்கோவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான முரண்பாடுகள் இலங்கையின் பரிமாற்ற நெருக்கடியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், நிலக்கரி, உரம் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 33% மக்களுக்கு எரிபொருள் அவசியமான காரணியாக இருப்பதாகவும் அவர் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் எரிபொருளை பெறுவதில் இலங்கை சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் இதன் காரணமாக மானிய விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் இலங்கை நீண்டகாலமாக சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும், சர்வதேச நியதிகள் அல்லது சட்டங்களை மீறாமல் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...