மீண்டும் வரிசை: 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது!

Date:

நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்தை குறிப்பிட்ட திகதியில் நடைமுறைப்படுத்துவதில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தும் திகதியை  அறிவிப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

குறிப்பிட்ட திகதிகளில் விலைச்சூத்திரத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் தெரிவித்ததன் பின்னர் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

இனிமேல் தட்டுப்பாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் என நம்புவதாக பெற்றோலிய சங்கத்தின் இணை செயலாளர் கபில நாவுதுன்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளை ஓடர் செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்ததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...