முட்டைகளை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், எனினும் சிலர் முட்டைக்கு தட்டுப்பாடு இருப்பதாக சித்தரிக்க முயல்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட முட்டை விலையை மேலும் அதிகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.

உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டையை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...