‘முட்டை விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம்’

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், ஒரு சில வர்த்தகர்கள் முட்டை சந்தையை தாம் விரும்பியவாறு கையாள்வார்கள் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

கண்டியில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேவைக்கேற்ப முட்டை வரத்து இல்லாததால், மொத்த முட்டை விலை 53 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 45 ரூபாவாக இருந்தாலும், மொத்த விலையுடன் ஒப்பிடுகையில் சில்லறை முட்டை விலை 60 ரூபாயை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முட்டைக்கு 45 ரூபா கட்டுப்பாட்டு விலை இருந்த போதிலும், தற்போது அது உத்தியோகபூர்வமற்ற முறையில் 50 ரூபாயாக மாறியுள்ளதாகவும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டம் அமுலில் உள்ள போதிலும், மொத்த வியாபாரிகளுக்கு அதே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது பேக்கரி உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து 53 முதல் 55 ரூபாய் வரை முட்டைகளை வாங்குவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், சிறு வியாபாரிகள் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளை விற்று வியாபாரத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.

சிறு முட்டை விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறியதால், தற்போது ஒட்டுமொத்த முட்டை வியாபாரமும் முடங்கியுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...