‘முட்டை விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம்’

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், ஒரு சில வர்த்தகர்கள் முட்டை சந்தையை தாம் விரும்பியவாறு கையாள்வார்கள் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

கண்டியில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேவைக்கேற்ப முட்டை வரத்து இல்லாததால், மொத்த முட்டை விலை 53 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 45 ரூபாவாக இருந்தாலும், மொத்த விலையுடன் ஒப்பிடுகையில் சில்லறை முட்டை விலை 60 ரூபாயை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முட்டைக்கு 45 ரூபா கட்டுப்பாட்டு விலை இருந்த போதிலும், தற்போது அது உத்தியோகபூர்வமற்ற முறையில் 50 ரூபாயாக மாறியுள்ளதாகவும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டம் அமுலில் உள்ள போதிலும், மொத்த வியாபாரிகளுக்கு அதே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது பேக்கரி உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து 53 முதல் 55 ரூபாய் வரை முட்டைகளை வாங்குவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், சிறு வியாபாரிகள் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளை விற்று வியாபாரத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.

சிறு முட்டை விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறியதால், தற்போது ஒட்டுமொத்த முட்டை வியாபாரமும் முடங்கியுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...