மைத்திரியின் இரகசியப் புத்தகம் ஒன்று ஜனவரியில் வெளியாகவுள்ளது!

Date:

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார்.

நெருக்கடி, வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது வரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த போது தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அண்மைய நாட்களில் இலங்கையில் இல்லாத குறிப்பிட்ட நபரின் டெண்டரில் கையொப்பமிட மறுத்ததால் தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் பதவிகளை வகிக்க முடியாது எனவும் கட்சியின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவர் தமக்கு கூறியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...