மைத்திரியின் இரகசியப் புத்தகம் ஒன்று ஜனவரியில் வெளியாகவுள்ளது!

Date:

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார்.

நெருக்கடி, வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது வரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த போது தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அண்மைய நாட்களில் இலங்கையில் இல்லாத குறிப்பிட்ட நபரின் டெண்டரில் கையொப்பமிட மறுத்ததால் தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் பதவிகளை வகிக்க முடியாது எனவும் கட்சியின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவர் தமக்கு கூறியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...