ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்தடை!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ தொழில்நுட்பம் மூலம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...