வழிபாட்டுத்தலங்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவுறுத்தல்களை மின்சார சபை பின்பற்றுவதில்லை: சோபித தேரர்

Date:

வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தல்களை இலங்கை மின்சார சபை பின்பற்றுவதில்லை என ஓமல்பே சோபித தேரர்  தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணமானது பாவனையாளர்களை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் விளைவாக வழிபாட்டுத் தலங்களில் மின்சாரக் கட்டணம் 510% அதிகரித்துள்ளதாகவும் ஓமல்பே சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழு தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், மின் நுகர்வுக் கட்டணத்தில் இருந்து நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த போயா தினத்தில் அனைத்து ஆலய விளக்குகளையும் அணைக்க அனைத்து மாகாண சங்க சபைகளும் தீர்மானித்திருந்தன.

பின்னர், ஆணைக்குழு தலைவர் நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டார், தலைமை சங்கநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் தலைவர் வழங்கிய உறுதிமொழி உறுதிப்படுத்தப்பட்டது  என பீடாதிபதி கூறினார்.

வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்திலிருந்து நிவாரணம் வழங்க   அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால் மசோதாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. “பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து  நிவாரணம் வழங்கும் என நம்புகிறோம்,” என தேரர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...