வெளிநாட்டவர்களுடனான திருமண தடைகளை தளர்த்தியது இலங்கை!

Date:

இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான அனைத்து திருமணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை திட்டமிட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் படி, சுற்றறிக்கையால் திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள சிரமங்களைத் தணிக்க பிரதமர் குணவர்தன நவம்பர் 3 புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வது தொடர்பான சுற்றறிக்கை இல:18/2021 ரத்து செய்யப்படும் என நாட்டின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்த சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த சுகாதார அறிக்கை அவசியம்.

சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டுப் பிரஜை எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்பதைக் குறிக்கும் பாதுகாப்பு அனுமதி அறிக்கையும் அவசியம்.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதார பிரகடனம் மற்றும் பாதுகாப்பு அனுமதி அறிக்கை தொடர்பில் மாற்று செயல்முறைகளை அறிமுகப்படுத்துமாறு பதிவாளர் நாயகம் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது.

இந்த விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்ய விரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...