2022 சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான பொதுத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று (நவ.27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இவ்வருட மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் ஒட்டுமொத்தமாக 74 வீதம் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கல்விப் பொதுத் தராதர விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்திய கடன் திட்டத்தின் கீழ் தனியார் துறையினரின் ஆதரவுடன் அதனை முறையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...