எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75ஆவது தேசிய தினத்தில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை விரைவில் தயாரிக்குமாறும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கி இந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.