75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி!

Date:

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75ஆவது தேசிய தினத்தில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை விரைவில் தயாரிக்குமாறும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கி இந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...