9’A’ சித்தி பெற்ற மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!

Date:

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ‘9 A’ சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான ஒருவரால் தீ வைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி,  சனிக்கிழமை (26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிய போது  சந்தேக நபரால் தீ வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றப் பின்னணி கொண்டவர் என தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...