FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தார் தலைநகரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்!

Date:

கட்டார் உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான முன்னேற்பாடுகளும் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காற்பந்து அரங்கிற்கான தயார்நிலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வரும் ரசிகர்கள் தங்குவதற்கான பணிகள் தலைநகர் டோஹாவில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அதற்கமைய கால்பந்து ரசிகர்கள் தங்குவதற்காக, டோஹாவின் மத்திய பகுதியில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் வசித்தவர்கள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டு விட்டதாக அதில் வசித்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் தங்களால் இயன்ற தங்குமிடத்தை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நவம்பர் 20 ஆம் திகதி, உலகக் கிண்ண கால்பந்து தொடங்குவதற்கு நான்கு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியேறிவர்கள் கூறினர்.

டோஹாவின் ஆல் மன்சூரா மாவட்டத்தில் 1,200 பேர் தங்கி இருந்த ஒரு கட்டடத்தில், இரண்டு மணி நேரத்தில், அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இன்னும் சில இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அதிகாரிகள் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி,கட்டடத்தின் கதவுகளை பூட்டியதால், அவர்கள் தங்கள் பொருட்களை எடுக்க முடியாமலும் போனது.

பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...