அடுத்த ஆண்டு முதல் கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பமாகும்: சுசில்

Date:

செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அடுத்த வருடம் முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இன்று (25) பாராளுமன்ற பணிகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இருந்து கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பமாகும் என தெரிவித்த அமைச்சர், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13000 பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் பிற நிறுவனங்கள் உதவி செய்து வருவதாகவும், தேவையான வேலை புத்தகம் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பக்கட்டத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...