இன்று நாட்டுக்கு வந்தடைகிறது சீனாவினால் வழங்கப்படும் 9000 மெட்ரிக் தொன் டீசல்!

Date:

விவசாயிகள் மற்றும் மீன்பிடித்துறைக்காக சீன அரசாங்கம் 9000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் டீசலை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘சுப்பர் ஈஸ்டர்ன்’ என்ற கப்பல் இன்று சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவினால் இவ்வாறு 9000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்திலும்  டிசம்பரிலும் நாட்டை வந்தடையவுள்ள டீசல் தேவையானவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...