கடலில் மூழ்கும் நிலையில், படகில் இருந்து 300 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர்!

Date:

மூழ்கிய படகில் இருந்து 300  பேரை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டனர்.

கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் நேற்று இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

தகவல் கிடைத்ததும், கடற்படையினர் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கப்பலுக்கு உதவுமாறு தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டபோது சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் கப்பல் கனடாவுக்குச் செல்லும் வழியில் இருந்ததாகவும் கப்பலில் இருந்தவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.

எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...