கடலில் மூழ்கும் நிலையில், படகில் இருந்து 300 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர்!

Date:

மூழ்கிய படகில் இருந்து 300  பேரை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டனர்.

கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் நேற்று இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

தகவல் கிடைத்ததும், கடற்படையினர் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கப்பலுக்கு உதவுமாறு தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டபோது சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் கப்பல் கனடாவுக்குச் செல்லும் வழியில் இருந்ததாகவும் கப்பலில் இருந்தவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.

எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...