சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘சமாதான பேரணி‘ நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.
இதில் 25 சர்வமதத் தலைவர்கள், (‘யூத் பீஸ் பார்க்’) 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பேரணியின் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் வீதியில் நின்று, அமைதிச் செய்திகளை பதாகைகளின் மூலம் காட்சிப்படுத்தினார்கள்.
இறுதியாக, நியூ ரமடா ஹோட்டலின் கூட்ட அரங்கில் இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இருந்தது.