சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தும் சீனாவின் கொரோனா பாதிப்பு!

Date:

சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

கண்டறியப்பட்ட வழக்குகளில், 3709 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, 36,082 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை.

தொடர்ந்து நான்காவது நாளாக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு நாள் முன்பு, 35,183 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. அவர்களில் 3474 பேர் அறிகுறிகளுடனும், 31,709 பேர் அறிகுறியற்றவர்களாகவும் இருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தவிர, சீனாவில் 39,506 பேருக்கு கொரோனாத் தொற்று பதிவாகியுள்ளது.

கொரோனா பாதித்தவரில் ஒருவர் இறந்து போனார். இதனால், தற்போதைய நான்காவது அலை கொரோனாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,233 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் 26 ஆம் திகதி நிலவரப்படி, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 307,802 நோய் அறிகுறி உள்ளவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சீனா தனது கடுமையான ‘ஜீரோ-கொவிட் கொள்கையை’ செயல்படுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக, கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில், லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகளுடன் இன்னும் போராடும் முக்கிய பொருளாதாரங்களில் சீனாவும் உள்ளது.

கடுமையான லாக்டவுனுக்கு எதிராக பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர். பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன, மக்களுக்கும், அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுடனான மோதலும் அதிகரித்து வருகிறது.

 

Popular

More like this
Related

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...